-ஷாலினி சந்திரசேகர்
தமிழகத்தின் பரபரப்பான நகரம் என்றாலே நினைவுக்கு வருவது மதுரை தான். இங்கு 24 மணிநேரமும் நகரம் முழுவதும் படு பிஸி தான். இன்னொன்று சாப்பாடு… பரோட்டா, கறி தோசை, தண்ணி சட்னி பல வகையான அசைவ உணவுகள் என மதுரையின் உணவு பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியான மதுரை மாநகரத்தில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளோடு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது ‘டெம்பிள் சிட்டி ஹோட்டல்’.
நெடுஞ்சாலைகளில் இந்த ஹோட்டலை விரிவுப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், ’டெம்பிள் சிட்டி ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஜே.அபிராம் விகாஸ் நம்மிடம் பேசினார். “மதுரையில் 2003-ம் ஆண்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டேண்டிற்கு எதிரில் நாங்கள் முதன் முதலில் ‘டெம்பிள் சிட்டி ஹோட்டலை திறந்தோம். ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள், நார்த் இந்தியன் மற்றும் சைனீஸ் உணவுகள் அனைத்தும் அப்போது மதுரையில் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே இருந்தது. இதை மாற்றி சாதாரண மக்களும் அனைத்து உணவுகளையும் ருசிக்கும்படி மாற்றினோம். மதுரையில் இந்த மாதிரியான உணவுகளை ரெஸ்டாரெண்டில் முதன் முதலாக நாங்கள் தான் கொடுத்தோம். இது தான் எங்களுடைய பெஞ்ச் மார்க்!
எப்படி விரிவுப்படுத்தினீர்கள்?
பாரத் பெட்ரோலியத்துடன் இணைந்து மதுரை – திண்டுக்கல் மற்றும் மதுரை – திருச்சி சாலைகளில் உணவகம் திறந்தோம். அதன் பிறகு தான் மற்ற பிரபல உணவகங்களும் நெடுஞ்சாலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கின. மதுரையின் சிறப்பம்சமே சுற்றியுள்ள அனைத்தும் நான்கு வழிச்சாலைகளாக இருப்பது தான். ஆகையால் 6-7 நான்கு வழிச்சாலைகளில் நமது ’டெம்பிள் சிட்டி ஹோட்டல்’ செயல்பட்டு வருகிறது. விரைவில் 2 புதிய கிளைகளும் நெடுஞ்சாலை உணவகமாக ஆரம்பமாகவிருக்கிறது.

இந்த ஹை-வே ரெஸ்டாரெண்டுகளில் நிழல் தரும் கார் பார்க்கிங் உள்ளது. நிறைய பேர் வெயிலில் காரை நிறுத்த தயங்குவார்கள். எங்களிடம் அந்தப் பிரச்னை இல்லை. சுகாதாரமான பாத்ரூம் மற்றும் எங்களது அனைத்து நெடுஞ்சாலை உணவகங்களிலும் எலெக்ட்ரிக் கார் சார்ஜிங் வசதியும் உள்ளது.
நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்கள் களைப்பாறும் விதமாக டீ, காபி, ஜூஸ் போன்றவைகளோடு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, இருட்டுக்கடை அல்வா போன்ற பாரம்பரிய இனிப்புகளோடு எங்களது சொந்த தயாரிப்பான வளர்மதி ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் கிடைக்கும். அம்மாவின் கை பக்குவத்தில் ’டெம்பிள் சிட்டி ஃபுட் புராடெக்ட்ஸ்’ என்ற பெயரில் பொடி வகைகள், ஊறுகாய், தொக்கு மற்றும் வத்தல் போன்றவைகளும் எங்களிடம் கிடைக்கும். இவற்றை எங்களின் உணவகங்களிலும், ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம்.
டிரெண்டிங்கில் டெம்பிள் சிட்டி
கோவிட் பெருந்தொற்று நேரத்தில் மாஸ்க் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘மாஸ்க் பரோட்டா’ தயார் செய்தோம். இது படு வைரலானது. அதோடு கொரோனா வைரஸ் போன்ற தோற்றத்தில் போண்டாவையும் அறிமுகப்படுத்தினோம். இப்படி டிரெண்டிங்கிற்கு ஏற்றவாறு எங்களை தயார் செய்துக் கொள்கிறோம்.

ரெஸ்டாரெண்டில் ஒரு ஷாப்பிங்
இதுபோக இந்திய கை வேலைப்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், ’பிளாசம்ஸ் (Blossoms) ஹேண்டிகிராஃப்ட்’ என்ற ஸ்டோரை நமது அனைத்து உணவகங்களிலும் வைத்துள்ளோம். தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு பயன்தரும் வகையில், மதுரை சம்பந்தமான விஷயங்களை கை வேலைப்பாடுகளாக இங்கே வைத்துள்ளோம். அதோடு வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இந்திய வேலைப்பாடுகளை இந்த ஒரே கடையில் பார்க்கலாம். தேசிய விருது பெற்ற பல கைவினை கலைஞர்களின் பொருட்கள் நமது கடையில் இடம்பெற்றுள்ளன. மகளீர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிடும் நோக்கில், அவர்களின் தயாரிப்புகளும் நம்மிடம் கிடைக்கும். தவிர, மாற்றுத்திறனாளிகள் செய்யும் பர்ஸ், பை போன்ற பொருட்களும் நமது ’பிளாசம்ஸ் (Blossoms) ஹேண்டிகிராஃப்ட்’ ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன.
உள்ளூர்க்காரர்களுக்கே முன்னுரிமை
நமது டெம்பிள் சிட்டி ஹோட்டலில் 20% வேலையாட்கள் தான் வட இந்தியர்கள். மற்றபடி அனைவரும் உள்ளூர்க்காரர்கள் தான். நமது கிளைகள் பொதுவாகவே நெடுஞ்சாலைகளில் இருப்பதால், அதை ஒட்டிய கிராமங்களில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறோம். எந்த அனுபவமும் இல்லை என்றாலும் அவர்களுக்கு 3 மாதம் சம்பளத்துடன் கூடிய பயிற்சியை வழங்கி பின்னர் தான் பணியில் அமர்த்துகிறோம். அதிலும் 70-80 சதவீதம் பெண்கள் தான் வேலை செய்கிறார்கள்” எனக் கூறி முடித்தார்.
“மென்மேலும் வளர வாழ்த்துக்கள்”


