Author: Chokkapan Srinivasan

சொக்கப்பன் சீ இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு என்றாலே அது ஓட்டல்கள், உணவகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள், பேக்கரிகள், மற்றும் உணவு அமைப்புகள் போன்ற வணிக நிறுவனங்களின் பொறுப்பு என்ற பார்வையே நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஆனால், அந்த அணுகுமுறை பிரச்சினையின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறது, என்கிறார் ஈரோடு மண்டல ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர், ஜி.எஸ். வேலுமணி. “வணிக ரீதியில் இயங்கும் உணவு நிறுவனங்கள் ஆய்வுகள், உரிமங்கள், தணிக்கைகள் மற்றும் பல்வேறு ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டிருக்கின்றன. ஆனால் உணவு தயாரித்தல், சேமித்தல் மற்றும் உட்கொள்ளுதல் ஆகியவற்றின் பெரும்பகுதி வீடுகளில்தான் நடைபெறுகிறது. அங்கு உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இன்னும் போதுமான அளவில் இல்லை,” என்பது அவரது கவலை.

Read More