-ச.ஷாலினி
ஹோட்டல்களில் தங்கும் பயணிகள் தங்களது அறைக்கே வந்து சேரும் ஹோட்டல் உணவை (Room Service) தவிர்த்துவிட்டு, Swiggy மற்றும் Zomato போன்ற உணவு விநியோக செயலிகள் மூலம் ஆர்டர் செய்வது தற்போது ஒரு புதிய டிரெண்டாக மாறி வருகிறது. இதனை பிரபல தொழிலதிபர் சுட்டிக்காட்டியுள்ளது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவில், ஹோட்டலுக்குள் டெலிவரி உணவு பையை கொண்டு செல்லும் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், “ஹோட்டல் துறையில் இது ஒரு புதிய மாற்றமாக உருவெடுத்து வருகிறது. இதை ஹோட்டல்கள் கவனிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குணால் பாலின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பல காரணங்களை கமெண்டுகளில் அடுக்கி வருகின்றனர். அதன் முக்கிய காரணங்கள் இதோ:
அதிக விலை: ஹோட்டல் மெனுவில் உள்ள உணவுகளின் விலை, வெளி உணவகங்களை விட பல மடங்கு அதிகமாக இருப்பது.
குறைந்த தேர்வுகள்: ஹோட்டல் உணவகங்களில் குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே கிடைக்கும், ஆனால் செயலிகளில் பல நூறு தேர்வுகள் உள்ளன.
சுவை மற்றும் தரம்: பல நேரங்களில் ஹோட்டல் உணவை விட உள்ளூர் புகழ்பெற்ற உணவகங்களின் சுவை பயணிகளை ஈர்க்கிறது.
குழந்தைகளுக்கான விருப்பம்: குழந்தைகளுக்குப் பிடித்தமான குறிப்பிட்ட உணவுகளை எளிதாகத் தேர்வு செய்ய முடிகிறது. எனக் காரணங்களை அடுக்கியுள்ளனர்.
மேலும், சில ஹோட்டல்கள் வெளியிலிருந்து வரும் உணவை அனுமதிக்காமல் தடுப்பதாகவும், சில இடங்களில் பயணிகள் ரிசெப்ஷனுக்கு வந்து உணவை வாங்கிக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம், ஹோட்டல் துறையில் பயணிகளின் உணவு பழக்கம் மாறி வருவதை காட்டுகிறது. ஹோட்டலில் தங்கினாலும், உணவுக்காக டெலிவரி செயலிகளை நாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

