Author: Shalini Chandrasekar
சென்னையில் 1,100 கோடி முதலீடு: தமிழக அரசுடன் பிரிகேட் ஹோட்டல்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்
தமிழகத்தை உலகளாவிய சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று (பிப்ரவரி 2, 2026) ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026’ பிரம்மாண்டமாகத் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நாளிலேயே, முன்னணி ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் குழுமமான பிரிகேட் ஹோட்டல் வென்ச்சர்ஸ் (Brigade Hotel Ventures) நிறுவனம் தமிழக அரசுடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ₹1,100 கோடி முதலீடு – 3 புதிய ஹோட்டல்கள் இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னையில் சுமார் ₹1,100 கோடி முதலீட்டில் சர்வதேச தரத்திலான மூன்று புதிய சொகுசு ஹோட்டல்களை அந்நிறுவனம் அமைக்க உள்ளது. இதன் மூலம் சென்னையின் விருந்தோம்பல் துறை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமையவுள்ள ஹோட்டல்கள் கிராண்ட் ஹயாட் (Grand Hyatt): சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைய உள்ளது. ஜே.டபிள்யூ மேரியட் (JW Marriott): பழைய மகாபலிபுரம் சாலையில்…
பட்ஜெட் 2026: தமிழக உணவு மற்றும் சுற்றுலாத் துறைக்குக் கிடைத்துள்ள பெரும் வாய்ப்புகள்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தமிழகத்தின் சமையல் மற்றும் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கான முக்கிய சிறப்பம்சங்கள்: தேங்காய் மற்றும் முந்திரி மேம்பாடு: தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் தேங்காய் மற்றும் முந்திரி விவசாயத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய முந்திரியை 2030-க்குள் சர்வதேச பிராண்டாக மாற்றும் திட்டம், தமிழக உணவுப் பதப்படுத்தும் (Food Processing) நிறுவனங்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும். பறவைகள் சரணாலயம் மற்றும் சுற்றுலா: தமிழகத்தின் புலிகாட் ஏரி (Pulicat Lake) பகுதியில் புதிய பறவைகள் கண்காணிப்புப் பாதைகள் (Bird Watching Trails) உருவாக்கப்படும். இது உள்ளூர் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் வருவாயை அதிகரிக்க உதவும். மேற்குத் தொடர்ச்சி மலைச் சுற்றுலா: நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (Podigai Malai) மலையேற்றப் பயிற்சிகள் மற்றும்…
நெல்லை ’காப்பர் லீஃப் ஹோட்டல்’ நிறுவனம் மதுரை மற்றும் தூத்துக்குடியில் கிளைகளைத் தொடங்கத் திட்டம்
இந்த நேர்காணலின் விளம்பரதாரர் திருநெல்வேலியின் ‘காப்பர் லீஃப் ஹோட்டல்’ அடுத்ததாக மதுரை மற்றும் தூத்துக்குடியில் கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. 42 அறைகள், சைவம் மற்றும் அசைவத்துக்கு என தனித்தனியே 2 ரெஸ்டாரெண்டுகள், காஃபி ஷாப், 3 விருந்து மண்டபம் (Banquet hall) என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் அந்த ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் திரு.ஸ்ரீ தர்ஷன் அவர்களிடம் பேசினோம்… சீசன் இல்லாத (Off season) காலங்களில் என்ன செய்வீர்கள்? அந்த நேரங்களில் நாங்கள் எங்களை சீர்படுத்திக்கொள்வோம். ஹோட்டலில் வேலை செய்பவர்களை அடுத்த சீசனுக்கு ஏற்றவாறு தயார் செய்வோம். நிலுவையில் இருக்கும் மற்ற பணிகளை முடிப்போம். வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஆஃபர் மற்றும் விழாக்களை முன்னெடுப்போம். கார்ப்பரேட் விழா – குடும்ப விழா… இவற்றில் எது உங்களுக்கு லாபம்? குறிப்பிட்டு சொல்ல முடியாது. குடும்ப விழாக்கள் நன்றாக இருக்கும். ஆனால் கார்ப்பரேட் விழாக்கள் தொடர்ச்சியாக இருக்கும். 365 நாட்களும் கார்ப்பரேட் தொழில்…
இந்த கட்டுரையை வழங்குபவர்
‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026’ – மாமல்லபுரத்தில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது!
இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா மற்றும் முதலீட்டு மையமாக தமிழகத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு 2026” (Tamil Nadu Global Tourism Summit 2026) வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரம் ‘ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன்’ (Four Points by Sheraton) விடுதியில் நடைபெற உள்ளது. அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் இணையதள வெளியீடு இந்த மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் இணையதளத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் மற்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். தமிழகத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மற்றும் முதலீட்டு மையமாக மாற்றுவதற்கான மாநில அரசின் திட்டத்தில் இந்த வெளியீடு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. “Explore. Evolve. Elevate.” – ஒரு தொலைநோக்குப் பார்வை “ஆராய்வோம், பரிணமிப்போம், மேம்படுத்துவோம்” (Explore. Evolve. Elevate.) என்ற…
பட்ஜெட் 2026: ஹோட்டல் துறைக்கு ‘Infrastructure’ அந்தஸ்து கிடைக்குமா? இந்திய ஹோட்டல் அதிபர்களின் எதிர்பார்ப்பு!
2026-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நெருங்கி வரும் வேளையில், இந்திய ஹோட்டல் துறையினர் மத்திய அரசுக்கு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தற்போதைய சவால்கள் உள்நாட்டுத் தேவை அதிகரித்துள்ள போதிலும், புதிய ஹோட்டல்களுக்கு நிலம் வாங்குதல் மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் பெரும் சவாலாக இருப்பதாகத் தெரிகிறது. ஒரு ஹோட்டல் கட்டி முடிக்க 5 முதல் 8 ஆண்டுகள் வரை ஆவதும் பெரும் சிக்கலை தருகிறது. இதற்கிடையில், 2026 நிதியாண்டில் பிரீமியம் ஹோட்டல்களின் விகிதம் 72-74% ஆக இருக்கும் என ICRA ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. ‘கட்டமைப்பு அந்தஸ்து’ (Infrastructure Status) ஏன் அவசியம்? ரேடிசன் ஹோட்டல் குழுமத்தின் (Radisson Hotel Group) தெற்காசிய நிர்வாக இயக்குநர் நிகில் சர்மா, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இத்துறை 7-8% பங்களிப்பதாகக் கூறினார். “ஆன்மீகச் சுற்றுலா, திருமணங்கள் மற்றும் மருத்துவச் சுற்றுலா என வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், ஹோட்டல் துறையை ‘உற்பத்தி சார்ந்த…
‘சங்கீதா’ உணவகம் தொடர்ந்த வழக்கு: ‘கீதம்’ உடன் சமரசமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சென்னையின் பிரபல உணவகச் சங்கிலியான ‘சங்கீதா’ (Sangeetha) மற்றும் அதன் முன்னாள் ஃபிரான்ச்சைஸி (Franchisee) நிறுவனமான ‘கீதம்’ (Geetham) ஆகியவற்றுக்கு இடையிலான வர்த்தக முத்திரை (Trademark) மீறல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தார். அதே சமயம், இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாகப் போக விரும்பினால் அதற்கு அனுமதி அளிப்பதாகவும், சமரசம் ஏற்பட்டால் அது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வழக்கும் பின்னணியும் சங்கீதா கேட்டரர்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம் ஆஜராகி வாதிட்டார். அவர் முன்வைத்த முக்கிய வாதங்கள் பின்வறுமாறு… 1985-ல் பி.சுரேஷ் மற்றும் பி.ராஜகோபால் ஆகியோரால் தொடங்கப்பட்ட ‘சங்கீதா’, இன்று 29 உள்நாட்டு கிளைகள் மற்றும் 21 வெளிநாட்டு கிளைகளுடன் பெரும் நற்பெயரைப் பெற்றுள்ளது. 2009 முதல் ராஸ்னம் புட்ஸ் (Rasnam Foods) நிறுவனத்திற்கு வேளச்சேரி, துரைப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட…
மதுரை நெடுஞ்சாலைகளில் 2 புதிய உணவகங்கள் திறக்க இருக்கும் ‘ஹோட்டல் டெம்பிள் சிட்டி
-ஷாலினி சந்திரசேகர் தமிழகத்தின் பரபரப்பான நகரம் என்றாலே நினைவுக்கு வருவது மதுரை தான். இங்கு 24 மணிநேரமும் நகரம் முழுவதும் படு பிஸி தான். இன்னொன்று சாப்பாடு… பரோட்டா, கறி தோசை, தண்ணி சட்னி பல வகையான அசைவ உணவுகள் என மதுரையின் உணவு பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியான மதுரை மாநகரத்தில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளோடு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது ‘டெம்பிள் சிட்டி ஹோட்டல்’. நெடுஞ்சாலைகளில் இந்த ஹோட்டலை விரிவுப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், ’டெம்பிள் சிட்டி ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஜே.அபிராம் விகாஸ் நம்மிடம் பேசினார். “மதுரையில் 2003-ம் ஆண்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டேண்டிற்கு எதிரில் நாங்கள் முதன் முதலில் ‘டெம்பிள் சிட்டி ஹோட்டலை திறந்தோம். ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள், நார்த் இந்தியன் மற்றும் சைனீஸ் உணவுகள் அனைத்தும் அப்போது மதுரையில் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே இருந்தது. இதை மாற்றி சாதாரண மக்களும் அனைத்து உணவுகளையும்…
தமிழகத்தின் பாரம்பரிய ‘உதயம்’ பிராண்டை கைப்பற்றியது ரிலையன்ஸ்: தேசிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டம்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தமிழகத்தின் முன்னணி மற்றும் பாரம்பரிய பிராண்டான ‘உதயம் அக்ரோ புட்ஸ்’ (Udhaiyam Agro Foods) நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை (70%-க்கும் மேல்) அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளது. இந்தியாவில் பிராண்டட் உணவுப் பொருட்கள் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் ரிலையன்ஸின் உத்தியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் இந்த புதிய கூட்டு முயற்சியில் (Joint Venture) ரிலையன்ஸ் நிறுவனம் பெரும்பான்மை கட்டுப்பாட்டை வைத்திருக்கும். தற்போதைய உரிமையாளர்களான எஸ். சுதாகர் மற்றும் எஸ். தினகர் ஆகியோர் சிறிய அளவிளான பங்குகளைத் தக்கவைத்துக்கொள்வதோடு, நிறுவனத்தை தொடர்ந்து முன்னின்று நடத்துவார்கள். 30 ஆண்டுகள் பழமையான ‘உதயம்’ பிராண்ட், உயர்தர பருப்பு வகைகள், அரிசி மற்றும் மசாலாப் பொருட்கள் தென்னிந்தியாவில் பெயர் பெற்றது. இதன் ஆண்டு வருவாய் தற்போது ₹600 கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஒப்பந்தத்தின் துல்லியமான மதிப்பு…
சவால்களைச் சந்திக்கும் தமிழக பேக்கரித் தொழில் – தமிழ்நாடு பேக்கர்ஸ் பெடரேஷன் தலைவர் எஸ். பாண்டுரங்கன்!
தென்னிந்தியாவிலேயே மிகவும் சுறுசுறுப்பான வணிகமாக திகழும் தமிழ்நாட்டின் பேக்கரித் தொழில், தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் நுகர்வோர் ரசனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், சென்னை முதல் தஞ்சாவூர், திருச்சி, மதுரை வரை பேக்கரிக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போதைய கள நிலவரம்: எண்கள் சொல்லும் உண்மை 2023-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பேக்கரி மற்றும் கேக் கடைகளின் எண்ணிக்கை 6% வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது மாநிலத்தில் மொத்தம் 13,700-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன. தனிநபர் உரிமம்: இதில் 87% கடைகள் தனிநபர்களால் நடத்தப்படும் சிறு வணிகங்கள். மீதமுள்ளவை மட்டுமே பெரிய சங்கிலித் தொடர் (Chains) நிறுவனங்கள். நகரவாரியாக: சென்னை 1,574 கடைகளுடன் முதலிடத்திலும், கோவை (1,002), திருப்பூர் (761) மற்றும் மதுரை (570) ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஆயுட்காலம்: சென்னையில் ஒரு பேக்கரியின் சராசரி ஆயுட்காலம் 4 ஆண்டு 6 மாதங்கள்.…
