Close Menu
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • அயலக உணவகங்கள் 
  • எங்களை தொடர்பு கொள்ள

துப்பிப்புகளை பெற Subscribe செய்யுங்கள்

உணவு, பானம், ஹோட்டல் மற்றும் சமையல் துறைகளின் சமீபத்திய செய்திகள், வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் புதுப்பிப்புகளை நேரடியாக உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.

Loading
சூடான செய்திகள்

அமெரிக்காவின் இறக்குமதி வரி எதிரொலி: ஆள்அரவமின்றித் தவிக்கும் திருப்பூர் உணவகங்கள்!

Sponsor: N.S. Muthiah & SonsDecember 23, 2025

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர். லால்வேனா எச்சரிக்கை

December 23, 2025

மாரியட் மகாபலேஷ்வரின் முற்றம் சமையல்காரர் கிராந்தி மலாய் ரேவை நிர்வாக சமையல்காரராக வரவேற்கிறது

November 14, 2025
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
Subscribe
  • முகப்பு
  • உணவகங்கள்
  • அடுமனை / பேக்கரி
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • சங்கங்கள்
  • விநியோகஸ்தர்கள்
  • வேலை வாய்ப்புகள்
  • அயலக உணவகங்கள் 
  • எங்களை தொடர்பு கொள்ள
கிட்சன் ஹெரால்டுகிட்சன் ஹெரால்டு
  • உணவு உற்பத்தியாளர்கள்
  • அடுமனை / பேக்கரி
  • அயலக உணவகங்கள் 
  • வேலை வாய்ப்புகள்
  • உணவகங்கள்
  • விநியோகஸ்தர்கள்
Home»சங்கங்கள்»ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர். லால்வேனா எச்சரிக்கை
சங்கங்கள்

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர். லால்வேனா எச்சரிக்கை

System AdministratorBy System AdministratorDecember 23, 2025No Comments2 Mins Read1 Views
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link

ஆற்காடு: தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையில் ஒரு சில அதிகாரிகளிடையே நிலவும் லஞ்ச கலாச்சாரம் மற்றும் ‘மாமூல்’ வசூலிக்கும் புதிய உத்திகள் குறித்துப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்தத் துறையின் ஆணையர் ஆர். லால்வேனா (IAS) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர்கள் எழுப்பிய புகார்
சமீபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் மண்டல மாநாட்டில், ராணிப்பேட்டை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களுக்கு விடுக்கப்படும் லஞ்ச நெருக்கடிகள் குறித்து ஆவேசமாகப் புகார் தெரிவித்தனர். வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

முன்பெல்லாம் உணவக உரிமையாளர்களுக்கு ரவுடிகள் தரும் தொந்தரவே பெரிய பயமாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறி, ஆய்வு என்ற பெயரில் வரும் ஒரு சில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் ‘மாமூல்’ மிரட்டல்களே பெரிய அச்சமாக உருவெடுத்துள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஆணையரின் அதிரடி பதில்
இந்த விவகாரம் குறித்து ‘கிச்சன் ஹெரால்டு’ இதழுக்கு பேட்டியளித்த ஆணையர் ஆர். லால்வேனா, தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

“பாதிக்கப்பட்ட ஹோட்டல் அல்லது பேக்கரி உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்துத் துல்லியமான புகார் அளிக்கலாம். லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இத்தகைய அத்துமீறல்கள் நடந்தால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், லஞ்ச ஒழிப்புத் துறையும் (DVAC) தலையிட அறிவுறுத்தப்படும்,” என்றார்.

புகார் அளிக்க வேண்டிய வழிகள்:

  • இணையதளம்: https://foodsafety.tn.gov.in/contact-us
  • மின்னஞ்சல்: cmr.fsda@tn.gov.in

இடைத்தரகர்கள் மூலம் ஊழல்: அதிர்ச்சித் தகவல்கள்
ராணிப்பேட்டை மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவர் பத்மநாபன் கூறுகையில், “ஊழல் என்பது ஒரு புற்றுநோய் போல பரவி, தற்போது மிக மோசமான நிலையை (Nadir) எட்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட அதிகாரி, தனது எல்லைக்குட்பட்ட உணவகங்களில் பணம் வசூலிக்க மாதம் 10,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு இடைத்தரகரை நியமித்திருந்தார். அவரை நாங்கள் கையும் களவுமாகப் பிடித்து எச்சரித்தோம்,” என்றார். மேலும், ஒரு உணவகத்திற்கு மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் லஞ்சமாகக் கேட்கப்படுவதாகவும், இல்லையெனில் வழக்கு தொடரப்போவதாக மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மாவட்ட ஆட்சியர் ஜே.யு. சந்திரகலா அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டபோது, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

பாரபட்சமான அணுகுமுறை
சங்கத்தின் பொருளாளர் நரேந்திர குமார் கூறுகையில், “தரமான அரிசி மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி உணவகம் நடத்துவோரைச் சிறு தவறுகளுக்காக அதிகாரிகள் குறிவைக்கின்றனர். ஆனால், ரேஷன் அரிசியைப் பயன்படுத்தி, சுகாதாரமற்ற முறையில் உணவு விற்கும் தெருவோரக் கடைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்களில் ஆய்வு நடத்தாத அதிகாரிகள், உணவக உரிமையாளர்களை மட்டும் அச்சுறுத்துகின்றனர்,” எனத் தெரிவித்தார்.

விழிப்புணர்வே முதல் தேவை
சங்கத்தின் செயலாளர் வெங்கடேஷலு கூறுகையில், அதிகாரிகள் எடுத்த எடுப்பிலேயே அபராதம் விதிக்காமல், முதலில் திருத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் (Step-by-step approach) என்றார்.

  • முதல் நிலை: முறையான எச்சரிக்கை.
  • இரண்டாம் நிலை: குறிப்பிட்ட கால அவகாசத்துடன் கூடிய நோட்டீஸ்.
  • இறுதி நிலை: சரி செய்யப்படாத பட்சத்தில் மட்டும் சீல் வைப்பது அல்லது சட்ட நடவடிக்கை.

உணவக உரிமையாளர்களில் பலர் போதிய கல்வி அறிவு இல்லாதவர்களாக இருப்பதால், அவர்களுக்கு விதிகள் குறித்து முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. “மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றும் சேவைத் துறையில் இருக்கும் எங்களுக்கு, ஊழலற்ற சூழலில் தொழில் செய்ய உரிமை உண்டு” என உரிமையாளர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Copy Link
Previous Articleமாரியட் மகாபலேஷ்வரின் முற்றம் சமையல்காரர் கிராந்தி மலாய் ரேவை நிர்வாக சமையல்காரராக வரவேற்கிறது
Next Article அமெரிக்காவின் இறக்குமதி வரி எதிரொலி: ஆள்அரவமின்றித் தவிக்கும் திருப்பூர் உணவகங்கள்!
System Administrator
  • Website

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்காவின் இறக்குமதி வரி எதிரொலி: ஆள்அரவமின்றித் தவிக்கும் திருப்பூர் உணவகங்கள்!

Sponsor: N.S. Muthiah & SonsDecember 23, 2025

‘மேக் இன் இந்தியா’ விளிம்பை கூர்மைப்படுத்துதல் ஹாஃபெல்-இஸ்லர்

November 14, 2025

உணவு திரட்டிகளுடன் புதிய கமிஷன் மாதிரியை NRAI முன்னோடியாகக் கொண்டுள்ளது

November 14, 2025
Leave A Reply Cancel Reply

தேடுங்கள்
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • LinkedIn
சமீபத்திய முக்கிய செய்திகள்
நீங்கள் தவறவிடக்கூடாது
சங்கங்கள்

அமெரிக்காவின் இறக்குமதி வரி எதிரொலி: ஆள்அரவமின்றித் தவிக்கும் திருப்பூர் உணவகங்கள்!

Sponsor: N.S. Muthiah & SonsDecember 23, 2025

திருப்பூர்: அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கை காரணமாக திருப்பூரின் பின்னலாடைத் தொழில் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அதன் நேரடி பாதிப்பு…

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர். லால்வேனா எச்சரிக்கை

December 23, 2025

மாரியட் மகாபலேஷ்வரின் முற்றம் சமையல்காரர் கிராந்தி மலாய் ரேவை நிர்வாக சமையல்காரராக வரவேற்கிறது

November 14, 2025

குரோம்ப்டன் நிறுவனம் AirIQ தொழில்நுட்பம்: சில்வேர் & AQNova தொடர்களுடன் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் புகைபோக்கியை அறிமுகப்படுத்துகிறது.

November 14, 2025
வலைப்பதிவு வகைகள்
  • Uncategorized (2)
  • அடுமனை / பேக்கரி (1)
  • அயலக உணவகங்கள்  (1)
  • உணவு உற்பத்தியாளர்கள் (1)
  • சங்கங்கள் (4)
வலைப்பதிவு காப்பகங்கள்
  • December 2025 (2)
  • November 2025 (7)

துப்பிப்புகளை பெற Subscribe செய்யுங்கள்

உணவு, பானம், ஹோட்டல் மற்றும் சமையல் துறைகளின் சமீபத்திய செய்திகள், வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் புதுப்பிப்புகளை நேரடியாக உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.

Loading
கிச்சன் ஹெரால்ட்
கிச்சன் ஹெரால்ட்

கிச்சன் ஹெரால்ட் என்பது இந்திய சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் சமூகம் மற்றும் உலகளாவிய சமையல் சமூகத்திற்கான முன்னணி B2B டிஜிட்டல் ஊடகமாகும். நாங்கள் உலகளாவிய உணவுத் துறையைக் கண்காணித்து, எங்கள் வாசகர்களுக்கு சமீபத்திய செய்திகள், வேலை காலியிடங்கள் நேர்காணல்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். முக்கியமாக ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள், உணவு உற்பத்தியாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், விநியோகஸ்தர்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் பலவற்றைச் சென்றடையும் நாங்கள், HoReCA பிரிவுக்கு மிகவும் விரும்பப்படும் உணவு போர்டல்.

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
வலைப்பதிவு வகைகள்
  • Uncategorized (2)
  • அடுமனை / பேக்கரி (1)
  • அயலக உணவகங்கள்  (1)
  • உணவு உற்பத்தியாளர்கள் (1)
  • சங்கங்கள் (4)
பயனுள்ள இணைப்புகள்
  • முகப்பு
  • எங்கள் எழுத்தாளர்கள்
  • விளம்பரங்கள்
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக் கொள்கை
பதிப்புரிமை © 2021-2025 - கிச்சன் ஹெரால்ட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
உங்கள் நிறுவனத்திற்கான தொழில்முறை வலைத்தளத்தை DotBrix இலிருந்து பெறுங்கள்.

Type above and press Enter to search. Press Esc to cancel.