-ச.ஷாலினி
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises) MSME மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில் உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் பற்றிய பயிற்சி கோவையில் 5 நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்த இலவச பயிற்சி பிப்ரவரி 9 முதல் 13 வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வடவள்ளி ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை அரங்கில் நடைபெறுகிறது. பயிற்சியில் பங்கேற்கிறவர்கள் கீழ்க்காணும் துறைகளில் நேரடி செய்முறை பயிற்சியை பெறுவார்கள்.
மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் புதிய சிறுதானிய தயாரிப்புகள்
பாரம்பரிய அரிசி உணவு மதிப்பு கூட்டல்
பழம் மற்றும் காய்கறி பதப்படுத்தல்
ஊறுகாய் செய்யும் தொழில்
பேக்கரி தயாரிப்பு முறைகள்
இத்துடன் சேர்ந்து பணியைத் துவங்குவது எப்படி, சரக்கு பாதுகாப்பு விதிமுறைகள், அரசு நிதி உதவிகள், மாநில/மத்திய திட்ட உதவிகள், மற்றும் வங்கி கடன் வழிமுறைகள் பற்றிய வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.
உணவு தொழிலில் நுழைந்து தொழில் ஆரம்பிக்க விரும்புபவர்கள் முன்பதிவை செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 99447 99995 / 99944 44010 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

