-ச.ஷாலினி
இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL), இந்தியாவின் மிகப்பெரிய ஹாஸ்பிட்டாலிட்டி குழுமம், தற்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் (Thoothukudi/Tuticorin) புதிய Ginger பிராண்ட் ஹோட்டலை தொடங்குகிறது.
இந்த புதிய Ginger ஹோட்டல் திருநெல்வேலி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் 100 அறைகளுடன் அமைக்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
Qmin என்ற பிரபலமான உணவகம்
பார்
மீட்டிங்கிற்கான இடம்
அழகான உடற்பயிற்சி மையம் போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன.
தூத்துக்குடியின் கடல்சார் வர்த்தகம், உப்பு உற்பத்தி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பாரம்பரிய பலங்களுடன், ஆட்டோமொபைல் மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள பெரும் புராஜெக்ட்டுகளில் அதிகரித்து வரும் தேவையை இது நிவர்த்தி செய்யும்.
IHCL நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் செயல் துணைத் தலைவர் சுமா வெங்கடேஷ்: “தூத்துக்குடி தென்னிந்தியாவில் ஒரு முக்கியப் பொருளாதார மையமாக வளர்ந்து வருகிறது. வாகன மற்றும் எரிசக்தித் துறைகளில் உள்ள பெரும் திட்டங்களின் வளர்ச்சி, நீண்ட காலத் தங்குமிடங்களுக்கான குறிப்பிடத்தக்க தேவையை உருவாக்கியுள்ளது. இது ஜிஞ்சர் பிராண்டிற்கு ஒரு சிறந்த சந்தையாக அமைகிறது” என்றார்.
தங்கம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புரொமோட்டர் ஆர். கஜேந்திரன்: “IHCL நிறுவனத்துடன் சேர்ந்து, ஜிஞ்சர் பிராண்டைத் தூத்துக்குடிக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
இந்த புதிய ஹோட்டலுடன் IHCL-க்கு தமிழ்நாட்டில் மொத்தமாக 28 ஹோட்டல்கள் உள்ளன. இதில் 10 ஹோட்டல்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.

